திருப்புத்துார்:திருப்புத்துார் அருகே நெற்குப்பை பரியாமருதிப்பட்டியில் ஆனி உற்ஸவத்தை முன்னிட்டு தேர்திருவிழா நடந்தது.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த பரியாமருதிப்பட்டி சேவுக பெருமாள் அய்யனார் கோயிலில் பத்து நாட்கள் ஆனி உற்ஸவம் கொண்டாடப்படுகிறது. கடந்த ஜூலை 6ல் கொடிேயற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி சுவாமி திருவீதி வலம் வந்தார்.9ம் திருநாளை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. காலை 8:00 மணிக்கு சுவாமியும் அம்பாளும் தேரில் எழுந்தருளினர்.தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்தருளிய சுவாமியை அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் மாலை 3:00க்கு தேரோட்டம் துவங்கியது.