பதிவு செய்த நாள்
22
ஆக
2019
11:08
உடுமலை: உடுமலை, திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், மண்டலாபிஷேக நிறைவு விழாவில், கோவிந்தா கோஷம் முழங்க திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
உடுமலை, திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், ஜூலை 4ம்தேதி, விமரிசையாக நடந்தது. அடுத்த நாள் முதல் மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கின. நாள்தோறும், சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை மற்றும் மாலையில், கம்பராமாயணம், மகாபாரதம், விஷ்ணு சகஸ்ர நாமம், திருப்பாவை பாசுரம், திருமால் பெருமை குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சிகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்றுமுன்தினம், மாலை, 4:00 மணிக்கு லட்சுமி ஹயக்கிரீவர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, விஷ்வசேனர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார பூஜைகளுடன் தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு ஸ்ரீ வேங்கடேச பெருமாள், பத்மாவதி தயார், ஆண்டாள் நாச்சியார் சுவாமிகளுக்கு, அபிஷேகத்துடன் சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.பெருமாள், மஞ்சள் நிற பட்டுடுத்தி, மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.காலை, 9:00 மணிக்கு ேஹாமம், தொடர்ந்து, 11:00 மணிக்கு, பகல், 12:50 மணிக்கு பூர்ணாஹூதி நடந்தது. சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள், திரளாக கோவிந்தா கோஷத்துடன், வழிபட்டனர். மதியம், 12:00 மணிக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவையொட்டி, பஜனை மற்றும் பிருந்தாவனம் நிகழ்ச்சிகள் நடந்தன.