Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் உண்டியல் காணிக்கை ... மதுரை மீனாட்சி ஆவணிமூலத் திருவிழா: ஆக.,26ல் கொடியேற்றம் மதுரை மீனாட்சி ஆவணிமூலத் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை வேங்கடேச பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
எழுத்தின் அளவு:
உடுமலை வேங்கடேச பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
11:08

உடுமலை: உடுமலை, திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், மண்டலாபிஷேக நிறைவு விழாவில், கோவிந்தா கோஷம் முழங்க திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

உடுமலை, திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், ஜூலை 4ம்தேதி, விமரிசையாக நடந்தது. அடுத்த நாள் முதல் மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கின. நாள்தோறும், சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை மற்றும் மாலையில், கம்பராமாயணம், மகாபாரதம், விஷ்ணு சகஸ்ர நாமம், திருப்பாவை பாசுரம், திருமால் பெருமை குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சிகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்றுமுன்தினம், மாலை, 4:00 மணிக்கு லட்சுமி ஹயக்கிரீவர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, விஷ்வசேனர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார பூஜைகளுடன் தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு ஸ்ரீ வேங்கடேச பெருமாள், பத்மாவதி தயார், ஆண்டாள் நாச்சியார் சுவாமிகளுக்கு, அபிஷேகத்துடன் சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.பெருமாள், மஞ்சள் நிற பட்டுடுத்தி, மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.காலை, 9:00 மணிக்கு ேஹாமம், தொடர்ந்து, 11:00 மணிக்கு, பகல், 12:50 மணிக்கு பூர்ணாஹூதி நடந்தது. சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள், திரளாக கோவிந்தா கோஷத்துடன், வழிபட்டனர். மதியம், 12:00 மணிக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவையொட்டி, பஜனை மற்றும் பிருந்தாவனம் நிகழ்ச்சிகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar