பதிவு செய்த நாள்
22
ஆக
2019
11:08
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம் ஆக.,26 காலை 9:30 மணி முதல் 9:54 மணிக்குள் நடக்கிறது. இத்திருவிழா செப்.,12 வரை நடக்க உள்ளது. இந்நாட்களில் கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ தங்ககவசம், வைரக்கிரீடம் சாத்துப்படி, உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகியவை நடத்தப்படாது. உற்ஸவ நாட்களில் செப்.,1 முதல் தினமும் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல்கள் நடத்தப்படும். செப்.,1ல் கருங்குருவிக்கு உபதேசம், 2ல் நாரைக்கு மோட்சம் அருளியது, 3ல் மாணிக்கம் விற்றல், 4ல் தருமிக்கு பொற்கிழி அளித்தல், 5ல் உலவாக்கோட்டை, 6ல் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை நடக்கிறது.
பட்டாபிஷேகம்: செப்.,7 ல் காலையில் வளையல் விற்ற லீலையும், இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் சுவாமிக்கு பட்டாபிஷேகமும் நடக்கிறது. செப்.,8 ல் நரியை பரியாக்கியது, 9ல் புட்டுக்கு மண் சுமந்தது, 10ல் விறகு விற்ற லீலை நடக்கிறது. செப்., 11ல் காலை 9:35 மணிக்கு சட்டத்தேர் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணைகமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.