பதிவு செய்த நாள்
23
அக்
2019
11:10
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், வரும் 29ம்தேதி, குருபெயர்ச்சி விழா மற்றும் 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடக்கிறது.வரும் 29ம் தேதி அதிகாலை 3:18 மணிக்கு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார்.
அதனையொட்டி, புதுச்சேரி - திண்டிவனம் சாலை, மொரட்டாண்டியில் உள்ள 27 அடி உயர சனீஸ்வர பகவான் கோவிலில், குருபெயர்ச்சி விழா மற்றும் 1008 பால் அபிஷேகம், குரு பெயர்ச்சி மகா யாகம் நடக்கிறது.வரும் 28 ம் தேதி காலை 9:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. அதைத் தொடர்ந்து, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், 1008 கொழுக்கட்டை நிவேத்தியமும், மாலையில் 30 விதமான அபிஷேகங்கள், ஒவ்வொன்றும் 108 கிலோவில் அபிஷேகம் நடக்கிறது.வரும் 29 ம் தேதி காலை, குரு பெயர்ச்சி விழா நடக்கிறது.குரு சாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராசி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், ராசி பரிகார ஹோமம் நடக்கிறது. குருப்பெயர்ச்சி விழாவின்போது, குரு பகவானுக்கு யானை வாகனத்துடன் கூடிய பஞ்சலோக கவசம் அணிவிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அன்னதானமும், 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை சிதம்பரகுருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்து வருகின்றனர்.