மறுமை நாளில் மூன்றுவித மனிதர்களுடன் இறைவன் தர்க்கத்தில் ஈடுபடுவான். இது குறித்து, “என் பெயரைச் சொல்லி ஒப்பந்தம் செய்து விட்டு அதை மீறுபவன், சுதந்திரமான ஒருவனை கடத்திச் சென்று அதன் மூலம் கிடைத்த ஆதாயத்தில் சாப்பிடுபவன், கூலியாளிடம் முழுமையாக வேலை வாங்கி விட்டு கூலி கொடுக்காதவன். கூலியை தாமதமாக கொடுப்பதைக் கூட தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இறைவனின் முன்னிலையில் குற்றவாளியாக நிறுத்தப்படுவதோடு, கூலியாள் சார்பாக இறைவனே தர்க்கமும் செய்வான்.