பதிவு செய்த நாள்
08
நவ
2019
01:11
மாமல்லபுரம்: மாமல்லபுரம் சிற்ப வளாகங்களில், மூங்கில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ சிற்பங்களை காண, சுற்றுலாப் பயணியர் வருகின்றனர்.
அவ்வாறு வருவோர், தாங்கள் சாப்பிடும் நொறுக்குத்தீனி பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்களை வீசி எறிந்து, அசுத்தப்படுத்துகின்றனர். சிற்ப வளாகங்களில், தொல்லியல் துறை, வெளிப்புறத்தில், பேரூராட்சி நிர்வாகம், குப்பை கழிவுகளை அகற்றுகின்றன. சிற்ப வளாகத்தில், பயணியர் குப்பை போடுவதற்காக, பிளாஸ்டிக் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, கற்கள் மறைக்கப்பட்ட இரும்பு தொட்டிகள் வைக்கப்பட்டன. பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், மாமல்லபுரம் வந்து, சிற்பங்கள் கண்டு ரசித்தனர். அப்போது, குப்பைத் தொட்டிகள், முற்றிலும் அகற்றப்பட்டன. இந்நிலையில், சிற்ப வளாகத்தில், பிளாஸ்டிக் தடைவிதித்துள்ள, தொல்லியல் துறை, பாரம்பரிய தன்மைக்கேற்ப, தற்போது, மூங்கிலில் வடிவமைத்த, குப்பைத் தொட்டிகளை, ஆங்காங்கே வைத்துள்ளது.