அயோத்தி; ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட எட்டு கோவில்களின் பிராண பிரதிஷ்டை இன்று ஜூன் 3 முதல் ஜூன் 5, வரை நடைபெற உள்ளது.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திர் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட எட்டு கோவில்களின் புனித பிராண பிரதிஷ்டா விழாக்கள் இன்று துவங்கியது. முன்னதாக "ஸ்ரீ ராம ஜன்மபூமி வளாகத்திற்குள் உள்ள எட்டு கோவில்களின் பிரான் பிரதிஷ்ட நிகழ்ச்சிக்காக சரயு நதியின் புனிதக் கரையில் இருந்து, துறவிகள், ஆச்சார்யர்கள், ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்தக்ஷேத்ராவின் அறங்காவலர்கள், மற்றும் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில், ஒரு புனித கலச யாத்திரை நடைபெற்றது. "ஜனவரி 22 அன்று, ராமரின் குழந்தை வடிவம் பிரான் பிரதிஷ்டை செய்யப்பட்டது, இப்போது ராஜா ராம் ராமர் தர்பாரின் பிரான் பிரதிஷ்டை நடைபெற உள்ளது. விழாவிற்காக அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமி அலங்கார விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகள் தினமும் காலை 6:30 மணிக்குத் தொடங்குகிறது. ஜூன் 5 ஆம் தேதி, பிராண பிரதிஷ்டை காலை 11:25 மணிக்கு நடைபெறும், அதைத் தொடர்ந்து ஆரத்தி நடைபெறும். விழாவை முன்னிட்டு சரயு நதியில் நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள் ராமர் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜூன் 5 ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் சரயு ஜெயந்தி ஜன்மோத்சவ் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார் என்று ஸ்ரீராம்வல்லபகுஞ்சின் தலைவர் மஹந்த் ராஜ்குமார் தாஸ் மகாராஜ் தெரிவித்தார். இந்த நிகழ்வு ஜூன் 5 முதல் 11 வரை நடைபெறும், மேலும் ஒரு வார காலம் நடைபெறும் கொண்டாட்டத்தில் பக்தி நிகழ்வுகள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் இடம்பெறும்.