பெரிய காஞ்சிபுரத்தில் ஆதிகாமாட்சிக்கு 1,008 கலசாபிஷேகம்



காஞ்சிபுரம்; பெரிய காஞ்சிபுரத்தில் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலையில் மூலவருக்கு 108 சங்காபிஷேகமும், தொடர்ந்து உத்சவருக்கு 1,008 கலசாபிஷேகம் சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. மாலையில் மூலவர் காமாட்சியமமன் பட்டு நுால் அலங்காரத்திலும், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் ராஜ அலங்காரத்தில் புண்ணியகோடி விமானத்தில் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்