பழநி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்



பழநி, பழநி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று (ஜூன் 3) கொடியேற்றத்துடன் துவங்கியது.


திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று (ஜூன் 3) கொடியேற்றத்துடன் துவங்கியது. பழநி கிழக்கு ரதவீதி பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று காலை 10:55 மணிக்கு திருக்கொடி ஏற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலையில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 


நாளை (ஜூன் 4) காலை தந்தபல்லாக்கிலும், மாலை தங்கமயில் வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஜூன் 8, ல் மாலை 7:00 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். ஜூன் 9, அன்று மாலை 4:30 மணிக்கு வைகாசி விசாக தேரோட்டம் ரதவீதிகளில் நடைபெறும். அதன்பின் ஜூன் 12, அன்று திருஊடல் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் இரவு கொடி இறுக்குதலுடன் திருவிழா நிறைவடையும். விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மேலும் விழா நாட்களில் வைகாசி விசாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்