கேரளபுரம் விஸ்வநாதர் கோவில் தேர்த்திருவிழா துவக்கம்



பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடுவாயூர் அருகே உள்ள கேரளபுரம் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில், இரு நாள் தேர்த்திருவிழா இன்று தொடங்கியது.


இன்று அதிகாலை 1:30 மணிக்கு கோவில் மேல்சாந்தி மகேஸ்வர குருக்கள் தலைமையின் பூர்ணாபிஷேகம் நடந்தது. காலை, 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், ரத பூஜை, ரக் ஷாதாரணம், யத்ரா தானம் ஆகியவை நடந்தது. காலை 6:00 மணிக்கு உற்சவர் திருத்தேரின் எழுந்தருளும் ரதாரோகணம் நடைபெற்றது. அதன்பின், காலை, 8:30 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க, திருமஞ்சனம் நடந்தது. மதியம், 2:00 மணிக்கு திருத்தேரோட்டம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு பஜனை, மூலவருக்கு தீபாராதனையும், கிரமார்ச்சனையும் இரவு, 7:00 மணிக்கு கல்லூர் உன்னிகிருஷ்ணன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பாஞ்சாரிமேளம் என்ற செண்டை மேளம் நிகழ்ச்சி நடந்தது.  திருவிழாவின் இரண்டாவது நாளான, நாளை காலை, 7:30 மணிக்கு கோகுல தெருவில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறும். மதியம், 12:30 மணிக்கு பிரம்மாண்ட வானவேடிக்கை, பஜனை, ஆசீர்வாதம், தீபாராதனை நடைபெறும். இரவு, 11:00 பெருவனம் சதீசன் மாரார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளும் பஞ்சாரிமேளம் என்ற செண்டை மேளம் நிகழ்ச்சி நடக்கிறது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 25

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 5

மேலும்