விழுப்புரம்: ஒட்டேரிப்பாளையம் ஐயனாரப்பன் கோவில் ஆடி உற்சவத்தில், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழுப்புரம் அடுத்த ஓட்டேரிப்பாளையம் பூரணி, பொற்கலை சமேத ஐயனாரப்பன் கோவிலில், ஆடி மாத உற்சவம் நடந்து வருகிறது. இன்று காலை 8:00 மணிக்கு மூலவர் பொற்கலை, பூரணி சமேத ஐயனாரப்பனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து, மாலை 3:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. 5:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.