விழுப்புரம் ஐயனாரப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்



விழுப்புரம்: ஒட்டேரிப்பாளையம் ஐயனாரப்பன் கோவில் ஆடி உற்சவத்தில், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழுப்புரம் அடுத்த ஓட்டேரிப்பாளையம் பூரணி, பொற்கலை சமேத ஐயனாரப்பன் கோவிலில், ஆடி மாத உற்சவம் நடந்து வருகிறது. இன்று காலை 8:00 மணிக்கு மூலவர் பொற்கலை, பூரணி சமேத ஐயனாரப்பனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து, மாலை 3:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. 5:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்