சிவபக்த இராவணாதி அசுரர்களை அழிக்க மகாவிஷ்ணு மனிதனாக - ராமனாக அவதரித்தார்.
சிவ - விஷ்ணு - பிரம்ம சக்திகள் ஒன்றிய பராசக்தியாக - மகிஷாசுரனை அழிக்க துர்க்கை அவதரித்தாள்.
இரண்யகசிபுவை அழிக்க மகா விஷ்ணு வினோத நரசிம்ம அவதாரம் எடுத்தார். குதிரை முக அசுரனை அழிக்க மகாவிஷ்ணு குதிரைமுக ஹயக்ரீவர் அவதாரம் எடுத்தார். யானை முக கஜமுகாசுரனை அழிக்க வினோத கஜமுகவிநாயகர் அவதரித்தார். மகிஷி அரக்கியை அழிக்க விந்தையான ஹரி - ஹரபுத்திரன் ஐயப்பன் அவதரித்தார். இவ்வாறே சிவ வரம்பெற்ற சிங்கமுக, தாரக, க்ரௌஞ்ச, சூரபத்மாதியரை அழிக்க சிவாம்ச தேஜோமய கந்த அவதாரம் நிகழ்ந்தது. வியாசரின் ஸ்காந்தம் கந்த அவதார லீலைகளைக் கூறும். காஞ்சி குமர கோட்ட முருகன் அருளால் கச்சியப்ப சிவாச்சாரியார் என்ற அர்ச்சகர். முருகன் ‘திகடச்சக்கர ’ (திகழ் தசக்கர) என்ற ஆடியெடுத்துக்கொடுக்க ‘கந்த புராணம்’ என்று தமிழில் கந்தன் அவதார லீலைகளை 10, 345 பாக்களில் எழுதினார்- 15 ஆவது நூற்றாண்டில். அதில் கந்தன் அவதாரம் பற்றி என்ன எழுதினார்.
அருவமும் உருவமுமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய் பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பு அது ஒரு மேனியாகக் கருணைகூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திருமுருகன் வந்து அங்கு உதித்தனன் உலகம் உய்ய.