உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி புனித நீராடி வழிபாடு செய்தார்.
இன்று 1.28 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களும், இதுவரை 59.31 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களும் இந்தியாவின் ஒற்றுமை, சமத்துவம், நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் உயிருள்ள வெளிப்பாடான மகா கும்பம்-2025, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் பிரயாக்ராஜ் வந்த தமிழக கவர்னர் ரவி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு செய்தார்.
இது குறித்து அவர் க;றியதாவது; பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த எண்ணற்ற கோடிக்கணக்கான ஹிந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜின் புண்ணிய தீர்த்தமான திவ்ய, பவ்ய மகாகும்பத்தில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான வளத்துக்காகவும் வேண்டி வழிபட்டேன். இங்கு காற்றில் பரவியுள்ள தீவிரமான நேர்மறை சக்தி அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது. சுமார் 60 கோடி சனாதனிகள் ஏற்கெனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சியடைந்த ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உறுதியான சான்றாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.