குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்



குன்னுார்; குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் முக்கிய சித்திரை தேர்த்திருவிழா இன்று நடந்தது. தாசப்பளஞ்சிக செட்டியார் சமூகத்தினர் சார்பில் நடந்த இந்த விழாவில், துர்கையம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் துவங்கியது. மகளிர் அபிஷேக பொருட்களுடன், செண்டை, மேள தாளம் முழங்க நடனத்துடன் கோவிலை வந்தடைந்தனர். மதியம் 1:25 மணியளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் உப்பு மழை பொழிந்து, வழிபட்டனர். விழாவில், இலவச மோர்பந்தல் அமைக்கப்பட்டன. பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன. தாசப்பளஞ்சிக இளைஞர் சங்கம் சார்பில், கும்மி ஆட்டம், இன்னிசை நிகழ்ச்சி, வாண வேடிக்கை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று தையல் தொழிலாளர்களின் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. 18ல் முத்து பல்லக்கு, 19ல் புஷ்ப பல்லக்கு ஆகியவை நடக்கின்றன. தொடர்ந்து பல்வேறு உபயதாரர்கள் சார்பில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. மே 9ம் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்