பரமக்குடி துர்க்கை அம்மன் கோயில் பூச்சொரித்தல் விழா



பரமக்குடி; பரமக்குடி சின்ன கடை தெரு துர்க்கை அம்மன் கோயிலில் 44ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்தது. சித்திரை மாத தமிழ் புத்தாண்டு விழாவில் காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்து அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பாண்டிச்சேரி பூத கன இசை குழுவினரின் சிவ கயிலாய வாத்திய இசை முழங்க சிவன் பார்வதி நடன நிகழ்வு நடந்தது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி வீதி வலம் வந்தனர். இரவு 9:00 மணிக்கு ஊர்வலம் கோயிலை அடைந்தது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு வண்ண மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூக்கள் பரப்பப்பட்டது. இன்று காலை 10:00 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமானவர்கள் தரிசனம் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்