கோவை; ராம் நகர் விவேகானந்தா ரோடு வி என். தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 43ம் ஆண்டு சித்திரை திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.