திருவண்ணாமலை; ஆரணி கைலாசநாதர் கோவிலில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அறம் வளர்நாயகி சமேத கைலாச நாதர் கோவில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.