சிவகாசி; சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடந்த கயர் குத்து திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா ஏப். 30 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் காமதேனு, கைலாச பர்வத, வேதாள, யானை, ரிஷப உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். நேற்று பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இன்று கயர் குத்து திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் அலகு குத்தியும் அக்னி சட்டி எடுத்தும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்பிகை திருவீதி வலம் வந்து தேர் அலங்காரம் காணும் நிகழ்ச்சி நடந்தது.