தபசு திருக்கோலத்தில் அருள்பாலித்த பரமக்குடி விசாலாட்சி அம்மன்



பரமக்குடி; பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் இன்று விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலத்தில் அருள் பாலித்தார்.  நாளை காலை திருக்கல்யாணம் நடக்க உள்ளது. 


பரமக்குடி விசாலாட்சி அம்பிகா, சந்திரசேகர சுவாமி கோயில் சித்திரை திருவிழா துவங்கி நடக்கிறது. நேற்று இரவு குதிரை வாகனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி திக் விஜயம் நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு விசாலாட்சி அம்மன் கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் உலா வந்தார். பின்னர் மாலை 4:00 மணிக்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நாளை காலை 10:00 மணி முதல் 11:00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது. இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பூ பல்லக்கிலும் பட்டினப்பிரவேசம் வரவுள்ளனர். நாளை மறுநாள் ரத வீதிகளில் சித்திரைத் தேரோட்டம் நடக்கிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்