கார்த்திகை கடைசி சனி: அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு



கோவை: கார்த்திகை மாதம் கடைசிசனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள மூலவர் வெங்கடேச பெருமாள் மற்றும் உற்சவமூர்த்திக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் மூலவர் ஸ்ரீதேவி -பூதேவி சமேதராய் துளசி மாலை மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்