திருப்பதியில் பத்மாவதி தாயார் பரிணய உற்சவங்கள் கோலாகலமாக நிறைவடைந்தது



திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று திங்கள்கிழமை மாலை மிகுந்த கோலாகலத்துடன் நிறைவடைந்தன.

இன்று மாலை கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமானும், தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளிய அவரது தேவியரும், ஸ்ரீவாரி ஆலயத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். அவர்கள், நாராயணகிரி தோட்டங்களுக்குள் அமைந்துள்ள பத்மாவதி பரிணய உற்சவ மண்டபத்தை  நோக்கிச் சென்றனர்.

முந்தைய இரண்டு நாட்களைப் போலவே வரவேற்பு வைபவம், பூப்பந்து விளையாட்டு மற்றும் புது ஆடைகள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட திருமணச் சடங்குகள் அனைத்தும் மிகுந்த ஆடம்பரத்துடனும் சிறப்போடும் நடத்தப்பட்டன. இந்தச் சடங்குகளைத் தொடர்ந்து, ஒரு கொலுவு (அரசவை அமர்வு) நடைபெற்றது. அதன் உடனேயே, ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம் மற்றும் அதர்வன வேதம் ஆகியவை இனிமையான குரலில் ஓதப்பட்டன. கலைஞர்களின் பாரம்பரிய தாள வாத்தியங்களின் துணையோடு மங்கல இசை நிகழ்ச்சிகள்நடைபெற்றது. 

இந்நிகழ்வின்போது, ​​அன்னமாச்சார்யா திட்டத்தின் புகழ்பெற்ற கலைஞரான புல்லம்மா பாடிய அன்னமையா சங்கீர்த்தனைகள் பக்தர்களைப் பெரிதும் கவர்ந்தன. அதன்பின்னர், பெருமான் தனது தேவியருடன் ஊர்வலமாகத் திரும்பி வந்து, மீண்டும் கோவிலில் எழுந்தருளினார். இத்துடன், மூன்று நாட்கள் நடைபெற்ற பத்மாவதி பரிணய உற்சவங்கள் மிகச் சிறப்பாக நிறைவுபெற்றன. விழாவில் திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி முட்டாதா ரவிச்சந்திரா, வாரிய உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி, ஸ்ரீவாரி ஆலயத் துணைச் செயல் அதிகாரி லோகநாதம், பிற அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்