நத்தம்: வைகாசி மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால், பழம், பன்னீர் உட்பட 16 வகை பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி, வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயில் முருகப்பெருமான் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
கன்னிவாடி : தருமத்துப்பட்டி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால் அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ரெட்டியார்சத்திரம் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது