கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்



 காஞ்சிபுரம்: கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவிலில், துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.


காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு, அக்னி வசந்த பெருவிழா, 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை, 8:00 மணி அளவில், துரியோதனன் படுகளம் என்கிற தலைப்பில் சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லதா என்பவர் மகாபாரத சொற்பொழிவு ஆற்றினார். இதையடுத்து, துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில், பீமனின் கதாயுதத்தால், துரியோதனனின் தொடையை பிளந்து, வீழ்த்தப்பட்டார். இதையறிந்த காந்தாரி, துரியோதனன் இறந்த இடத்தில் ஒப்பாரி பாடலை பாடி, தன் புத்திர சோகத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, கிராமத்து இளைஞர்கள் துரியோதனுக்கு பெரிய அளவில் மலர் வளையம் வைத்து வழிபாடு செய்தனர். தீமிதி திருவிழாவிற்கு பூ குழி தீ வைக்கப்பட்டது. மாலை, தீமிதி திருவிழாவில் காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். இன்று காலை தர்மர் பட்டாபிஷேக விழாவும், இரவு நாடகமும் நடைபெற உள்ளன.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்