தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் சென்ற குழு; பத்திரமாக இருப்பதாக தகவல்



தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் சென்ற குழு சாகா எனும் இடத்தில் 148 பேரும் பத்திரமாக இருக்கிறார்கள்; அந்த குழுவில் ஒருவரான தேச மங்கையர்கரசி வீடியோ வெளியிட்டு உள்ளார். 


வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:  மானசரோவர் யாத்திரை செல்லும் வழியில் சாகா பகுதியில் உள்ளோம், போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது; நேபாளம், சீனா, இந்திய தூதரக அதிகாரிகளிடம் நாடு திரும்ப உதவி கேட்டுள்ளோம். அரசு ஒத்துழைப்பு வழங்கி பாதிக்கப்பட்டவர்கள் சீக்கிரமாக சரியான நிலைக்கு திரும்புவதற்கு இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறோம்; தாயகம் எல்லோரும் சீக்கிரமாக திரும்ப வேண்டும்.  எல்லாம் வல்ல சிவபெருமான் எங்களுக்கு துணை நிற்பார் என்ற நம்பிக்கையோடு உங்களிடம் இதை பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நமது நிருபர் 


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்