ஆவணி அவிட்டம்; திருத்தணி முருகன் கோவிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்து



திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று ஆவணி அவிட்டத்தை ஒட்டி, நான்கு மணி நேரம் கோவில் நடை சார்த்தப்பட்டது.


திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். காலை 6:00 மணி முதல், இரவு 8:45 மணி வரை, தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இன்று ஆவணி அவிட்டத்தை ஒட்டி, மதியம் 12:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, கோவில் நடை சார்த்தப்பட்டது. அந்த நேரத்தில், கோவில் குருக்கள் பூணுால் மாற்றியும், சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின், பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்