நீங்க குருசாமியா....



கார்த்திகை துவங்கியதும் பக்தர்கள் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். மாலை அணிந்து, விரதம் இருந்து, பக்திச்செறிவுடன் திருநாமத்தைச் சொல்லி சபரிமலைக்கு செல்கின்றனர். முழு ஈடுபாட்டுடன் விரதங்களை கடைபிடிக்கும் பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனாக மற்றவர்கள் மதிக்கிறார்கள்.


பாவங்கள் நீங்க ஐயப்பனை தரிசித்தால் போதும் என்பதால் ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகி வருகிறது. அவ்வாறு ஆர்வத்துடன் முதன்முறையாக சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லவிரும்பும் கன்னி சாமிகளுக்கு, குருசாமிகளின் வழிகாட்டுதலைப் பெற உதவுகிறது. தினமலர். கன்னிசாமிகளின் பயணத்துக்கு உதவ தயாராக இருக்கும், நன்கு அனுபவம் வாய்ந்த குருசாமிகள் மட்டும், தங்கள் பெயர், முகவரி, அலைபேசி (வாட்ஸ் ஆப்) எண்ணை 95000 14614 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பினால் தினமலர் நாளிதழில் சேவை நோக்கில் வெளியிடப்படும். வேறு தகவல்களை தர வேண்டாம். குருசாமியின் எண்களை, விருப்பமுள்ள கன்னிசாமிகள் தொடர்பு கொள்ளலாம். அந்த பகுதிக்குரிய சபரிமலை பயணக்குழுவுக்கான வாட்ஸ் ஆப் குரூப்பை குருசாமிகள் உருவாக்கி தேவையான ஆலோசனைகளை வழங்கலாம்.



குருசாமிகள் தங்கள் விவரங்களை அனுப்ப வேண்டிய


தினமலர் வாட்ஸ் ஆப் எண் 95000 14614



குறிப்பு: இந்த அறிவிப்பு எவ்வித லாபநோக்கமுமின்றி ஆன்மிகச்சேவை அடிப்படையில் மட்டும் வெளியிடப்படுகிறது. சபரிமலை பயணத்துக்கு முன்பாக, குருசாமிகளின் விவரங்களை சரிபார்த்து, உண்மைத் தகவல்களை உறுதி செய்துகொள்ள வேண்டியது, குழுவில் இணைவோரின் பொறுப்பாகும்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்