பழநி:பழநி முருகன்கோயிலில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதையொட்டி, பாலாலய யாகபூஜை துவங்கியது. நாளை (டிச.,2) முதல் திருப்பணிகள் துவங்க உள்ளன.
திண்டுக்கல் மாவட்டம்பழநி முருகன் மலைக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவடைந்ததால் விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.இதையொட்டி திருப்பணிகள் துவங்குவதற்காக, இந்துசமய அறநிலையத் துறை திருப்பணிகுழு ஸ்தபதிகள், பொறியியல், தொல்லியல்துறை வல்லுனர்குழு ராஜகோபுரம் உட்பட அனைத்து பிரகாரங்களில் கற்சிலைகள்,சுதைகளை ஆய்வுசெய்து பழமை மாறாமல் புதுப்பிக்க ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளை துவங்க நேற்று மலைக்கோயிலில் பாலாலயம் துவங்கியது. இன்று இரண்டாம், மூன்றாம்கால யாகபூஜைகள் நடக்கிறது.நாளை (டிச.,2), காலை 7:25 மணிக்கு திருப்பணிகள் ஆரம்பமாகிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயச்சந்திரபானுரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.