பதிவு செய்த நாள்
09
டிச
2019
04:12
உடுமலை:தொன்மை வாய்ந்த, கண்டியம்மன் கோவிலை புனரமைக்கும் திட்டம், இந்து அறநிலையத்துறையால் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். உடுமலை சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில், போதிய பராமரிப்பில்லாமல், பொலிவிழந்து வருகிறது.
இருகருவறை; ஒரே தெய்வம் என, பல்வேறு சிறப்புகளை பெற்ற கோவிலின் முன்மண்டபம், கோபுரம், மேற்கூரை பழுது, கொடி மரத்தில் விரிசல், தரைதளம் சிதிலம் உட்பட கோவிலில் தற்போது பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக புகார் தெரிவித்து வந்தனர்.எனவே, கோவிலை முழுவதுமாக புனரமைக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்து அறநிலையத்துறை சார்பில், கோவில் திருப்பணிகளை, 14 வது நிதி ஆணைய நிதி ஒதுக்கீட்டில், மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
பழமை வாய்ந்த கோவிலாக இருப்பதால், விதிமுறைகளின்படி, தொல்லியல் துறையின் தொழில்நுட்ப கருத்துரு பெற்ற பிறகே, துறை சார்பில், மதிப்பீடு தயாரிக்கப்படும். அவ்வகை யில், தொல்லியல் வல்லுனர்கள், கோவிலில் ஆய்வு மேற்கொண்டு, தொன்மை குறித்த அறிக் கை பெறப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாகியும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள் ள படாமல் உள்ளது. எனவே, பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.