பதிவு செய்த நாள்
09
டிச
2019
04:12
கோவை:ஹரிஹரபுரம், ஸ்ரீமடத்தின் பீடாதிபதியான சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள், நாளை (டிச.,10) கோவைக்கு விஜயம் செய்கிறார்.கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டம், ஹரிஹரபுரத்தில் ஸ்ரீமடம் எனும் ஸ்ரீ ஆதி சங்கராச்சார்ய சாரதா லட்சுமி நரசிம்ம பீடம் அமைந்துள்ளது. பீடாதிபதியான ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா சுவாமிகள், நாளை (டிசம்., 10ல்) கோவைக்கு விஜயம் செய்கிறார்.
அவருக்கு, கோவை, ராம்நகர், கோதண்டசுவாமி கோவிலில் பூர்ண கும்பத்துடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. டிச., 16 வரை கோவையில் தங்கியிருக்கும் அவர், தினமும் காலை 7:30 முதல் 8:30 மணி வரை சந்திர மவுலீஸ்வரர் பூஜை, மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை, ஸ்ரீ சக்கர நவாவர்ண பூஜை நடத்துகிறார்.தினமும் காலை, 10:00 முதல், 11:00 மணி வரை, சுவாமி கள் தரிசனம் தந்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்குகிறார். இதையடுத்து, மந்திராட்ஷ தை நடக்கிறது. டிச., 15 ம் தேதி காலை, 10:00 மணிக்கு, கோவை, ஆர்.எஸ்.புரம் டி.வி.சாமி ரோட்டில் (மேற்கு) உள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவிலில், காலை 10:00 மணிக்கு, லலிதா சகஸ்ரநாம பாராயணம் சுவாமிகளின் தலைமையில் நடக்கிறது.நிகழ்ச்சிகளில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி அருள் பெறலாம் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.விபரங்களுக்கு 95666 55655, 99440 99989, 99524 14848 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.