பதிவு செய்த நாள்
09
டிச
2019
04:12
திருப்பூர்:காங்கயம், சிவன்மலையில் சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலமாக,, மூன்று நாட்கள் நடக்கும். வரும் தைப்பூச தேர்த்திருவிழா பிப்., 8, 9, 10 ஆகிய நாட்களில் நடக்கிறது.இதையொட்டி, முதல் நிகழ்வாக தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று (டிசம்., 8ல்) நடந்தது.
கோவில் சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க, முகூர்த்தக்காலில் புனித நீர் தெளித்து, சந்தனம் பூசி, மாவிலை, பூமாலை உள்ளிட்ட, மங்கல பொருட்கள் அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. முகூர்த்தக்கால் மலையில் இருந்து படி வழியாக கொண்டுவரப்பட்டு, தேரில் நான்கு பக்கங்களிலும் நட்டு பூஜைகள் செய்யப்பட்டது.