பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார் ரங்கநாதர். நாபியில் பிரம்மா இல்லை. கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது. டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது. திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகரான லோக சாரங்கர் கல் எறிந்த போது, ரங்கநாதர் அதை தன் நெற்றியில் தாங்கி, ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.