ஸ்ரீரங்கம் கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வார் சன்னதி உள்ளது. அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்டெடுத்த பெருமாள், அவற்றை கருடாழ்வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இங்கு கருடாழ்வாரின் கையில், வேதங்கள் உள்ளன. சாளகிராம கல்லால் ஆன இவருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். கருட பஞ்சமியன்று சிறப்பு பூஜை நடக்கும்.