உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் பிரத்தியங்கராதேவி கோவிலில் தை மாத அமாவாசையை யொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.நேற்று காலை 10:30 மணியளவில் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் துவங்கியது. யாக குண்டத்தில் பால், பழ வகைகள், புடவைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பரம்பரை அறங்காவலர் செல்லம்மாள் அருணாச்சல குருக்கள் ஆசியுடன் மோகனசுந்தரம் குருக்கள் தலைமையில் 5 குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறக்கோரி எழுதிய வெற்றிலைகள் யாக குண்டத்தில் கொட்டப்பட்டது.நிகும்பலா யாகத்தில் உளுந்துார்பேட்டை, விழுப்புரம், திருக்கோவிலுார், கடலுார் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பிரத்தியங்கரா தேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.