Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ஆடம்பர வசதி சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வாகன யோகம்
எழுத்தின் அளவு:
கடகம்: (புனர்பூசம் 4,  பூசம், ஆயில்யம்) வாகன யோகம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2020
04:02

சாதுர்யமாகப் பேசுவதில் வல்ல கடக ராசி நேயர்களே!

செவ்வாய், சனி, கேது மாதம் முழுவதும் நற்பலன் தருவர். இதனால் தடைகளை உடைத்தெறிவீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். புதன் பிப்.21 வரையும், மார்ச் 11க்கு பிறகும், சுக்கிரன் பிப்.29 வரையும் நற்பலன் தருவர். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது. பொருளாதார வளம் அதிகரிக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டு. பிள்ளைகளின் வழியில் அனுகூலமான காலமாக இருக்கும். அக்கம்பக்கத்தினர் தொல்லையில் இருந்து விடுபடுவர்.


உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் நற்சுகம் உண்டாகும். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். சகோதர வழியில் முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். பிப்.22 –  மார்ச் 11 வரை  கணவன், மனைவி இடையே மனக்கசப்புகள் வரலாம் அனுசரித்து போவது நல்லது.

பெண்கள் குடும்பத்தின் முக்கிய அம்சமாக திகழ்வர். பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சகோதரவழியில் நன்மை ஏற்படும். ராகுவால் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புண்டு. ஆரோக்கியம் மேம்படும்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பகைவர் சதி எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
* வியாபாரிகளுக்கு எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். வெளியூர் பயணத்தால் இனிய அனுபவம் ஏற்படும். பகைவரை எதிர்த்து வெல்லும் வாய்ப்புண்டு. பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும்.
* தரகு, கமிஷன் தொழிலில் வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் மார்ச் 11க்கு பிறகு புதனின் துணையோடு உயர்ந்த நிலையை எட்டிப்பிடிப்பர்.  வேலையில் திருப்தியும், நிம்மதியும் காண்பர். மேலதிகாரிகள் உதவிகரமாக இருப்பர்.
* ஐ.டி., துறையினருக்கு சக பெண் ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.  
* மருத்துவர்களுக்கு எதிர்பாராத வகையில் நன்மை கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
* வக்கீல்களுக்கு, நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு  நண்பர்கள் உதவுவர்.  எதிரிகள் சரணடையும் நிலை உருவாகும்.
* அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
* கலைஞர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  
* விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். மஞ்சள், கறுப்பு நிற தானியம் மூலம் வருமானம் உயரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம்  கைகூடும். கால்நடை  வகையில் ஆதாயம் அதிகரிக்கும்.   
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். குருவின் பார்வையால் ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும்.

சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ராகுவால் பண விரயம், தொலை துார பயணம் ஏற்படும். சிலருக்கு பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. பிப்.29க்கு பிறகு தடைகள் குறுக்கிடலாம். அதை முறியடிக்க அனுபவசாலிகளின் வசம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம்.
* வியாபாரிகளுக்கு அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* வக்கீல்கள் பிப்.22 –  மார்ச்11 வரை பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது.
* ஆசிரியர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சல் ஏற்படலாம். முக்கிய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
* அரசு பணியாளர்களுக்கு சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அதிக அக்கறையுடன் பணியாற்றவும். சக ஊழியர்களிடம் பொறுமையுடன் விட்டுக் கொடுக்கவும்.
* அரசியல்வாதிகளுக்கு பிப்.29க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
* கலைஞர்கள்  பிப்.29க்கு பிறகு எதிரி தொல்லைக்கு ஆளாவர். சிலர். அவப்பெயரைச் சந்திக்கலாம்.

நல்ல நாள்: பிப்.13,18,19,20,21,22,28,29, மார்ச் 1,2,3,6,7,10,11
கவன நாள்: பிப்.23,24,25 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,6,7 நிறம்: சிவப்பு, கருப்பு

பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* தேய்பிறை அஷ்டமியில் பைரவர் தரிசனம்
* ஏகாதசி நாளில் பெருமாளுக்கு அர்ச்சனை

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar