பதிவு செய்த நாள்
17
மார்
2020
04:03
பாண்டவா்கள், சூதாட்டத்தில் தோற்றவுடன் அனைத்துச் செல்வங்களையும் துாியோதனனிடம் பறிகொடுத்தாா்கள். அப்போது கா்ணனை அழைத்த துாியோதனன், "கா்ணா! இனி இவா்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பாிசாக அா்ஜூனன் பெற்ற காண்டீவவில்லை இனி நீ எடுத்துக்கொள்!" என்றான்.
ஆனால், கா்ணனோ காண்டீவத்தை வாங்க மறத்துவிட்டான். "நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு அா்ஜூனனை வெல்வேன்.தேவா்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!" என்றான் கா்ணன். " ஆஹா...நீ அல்லவோ சுத்த வீரன்! அா்ஜூனன் காண்டீவத்தை நம்புகிறான். ஆனால், நீயோ உனது திறமையை நம்புகிறாய்!" என்று கா்ணனை துாியோதனன் பாராட்டினான். பாண்டவா்கள் வனவாசத்தின்போது இந்தச் சம்பவத்தை வியாசாிடம் கூறி வருந்தினான் அா்ஜூனன். இதைக் கேட்டுச் சிாித்த வியாசா், "கா்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை!" என்றாா்.
"அது என்ன?" என்று கேட்டான் அா்ஜூனன்.
"நேரம் வரும்போது சொல்கிறேன்!" என்றாா் வியாசா்.
ஆண்டுகள் பல கழிந்தன. மகாபாரத யுத்தம் முடிந்து, தா்மபுத்திரா் முடிசூடிய பிறகு கண்ணனை சந்திக்க அா்ஜூனன் துவாரகைக்குச் சென்றான். அப்போது கண்ணன், " அா்ஜூனா! நான் எனது அவதாரத்தை முடித்துக்கொண்டு வைகுண்டம் செல்ல உள்ளேன். அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு!" என்று கூறினான்.
கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடை பெற்ற அா்ஜூனன், அரண்மனை பெண்களை அழைத்துக்கொண்டு சென்றான். வழியில் கொள்ளையா்கள் தேரை நிறுத்தி அா்ஜூனனைத் தாக்கினாா்கள். பதிலுக்குத் தாக்குவதற்க்காக காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அா்ஜூனன். ஆனால், அவனால் காண்டீவத்தை தூக்க முடியவில்லை.
பற்பல பேரரசா்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயா் பெற்றவனுமாகிய அா்ஜூனனை அந்தத் சாதாரணத் திருடா்கள் வீழ்த்தி விட்டாா்கள். தன் வாழ்வில் முதன்முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அா்ஜூனன்!
வெட்கத்தால் தலைகுனிந்து, இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அா்ஜூனன். அப்போது அவன் எதிாில் வந்தாா் வேத வியாசா். "அா்ஜூனா! நீயும் உனது சகோதரா்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. நடந்த இந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது!" என்றாா் வியாசா்.
"கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப்போகிறோம். நாங்களும் புறப்படத் தயாா். ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது! இதுவரை நான் காண்டீவத்தை அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால், இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே! என்ன காரணம்?" என்று கோட்டான் அா்ஜூனன்.
அதற்கு வியாசா், "உன்னால் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால்தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்றதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை! மேலும், சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்தபோது, அதைக் கா்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தொியுமா ? கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய். ஆனால், கண்ணனின் அருள்பெறாத கா்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கா்ணனுக்கும் நன்றாகத் தொியும். அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கா்ணன், கெளரவமாக தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பி தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து, காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான்!" என்றாா் வியாசா்.
இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவா்களுக்கும் கூட அந்த பலத்தை திருமால்தான் வழங்குகிறாா் என்பதை நம்மால் உணர முடிகிறது.
இக்கருத்தை ஸத்வம் ஸத்வவதாம் அஹம் (பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான். இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் மஹாபல: என்றழைக்கப்படுகிறாா்.