பதிவு செய்த நாள்
28
மார்
2020
01:03
அன்னூர்: அன்னூர் பேரூராட்சியில், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று நடந்தது. அன்னூர் பேரூராட்சியில், ஐந்து பேர் வெளிநாடுகளில் இருந்து அன்னூர் திரும்பி வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வசிக்கும் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், ஓதிமலை ரோட்டில் உள்ள பெருமாள் கோவில், பாத விநாயகர் கோவில், மன்னீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில், நேற்று பிளீச்சிங் பவுடர் தூவும் பணியும், ஸ்பிரேயர் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடந்தது. இத்துடன், தர்மர் கோவில் வீதி, நாகமா புதூர், அவிநாசி ரோடு ஆகிய பகுதிகளில், மூன்று குழுக்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டன.
அன்னூர் பேரூராட்சியில், 15 வார்டுகளில் நகரத்தை தவிர மீதி, 7 வார்டுகளில், 14 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இன்னும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வில்லை, என, மக்கள் தெரிவித்துள்ளனர். கிராமப்புறத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை விரைவில் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் நிர்வாகம் சார்பில், கொரானோ வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டுமக்களை காக்கவும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும், தன்வந்திரியாகம் நடத்தப்பட்டது. இதற்க்கான, ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் செய்து இருந்தார்.