பதிவு செய்த நாள்
28
மே
2020
10:05
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் முன், திருமண நிச்சயம் செய்யும் வகையில், பலர் உப்புக்கூடை மாற்றினர்.உடுமலை மாரியம்மன் கோவிலில், முகூர்த்த நாட்களில், சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் இல்லங்களில் நடக்கும் திருமணத்திற்கு, இரு வீட்டாரும் நிச்சயம் செய்யும் வகையில், உப்புக்கூடை மாற்றும் நிகழ்ச்சியை, பாரம்பரியமாக மேற்கொண்டு வருகின்றனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்காமல், வழித்தடம் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முகூர்த்த நாள் என்பதால், ஏராளமானவர்கள், தங்கள் இல்ல திருமணத்தை நிச்சயம் செய்யும் வகையில், கோவிலுக்கு முன் வந்து, உப்புக்கூடை வைத்து வழிபாடு நடத்தி, இரு வீட்டாரும் மாற்றிக்கொண்டனர்.அதே போல், முகூர்த்தநாளான நேற்று உடுமலை நகை மற்றும் ஜவுளிக்கடைகளில், வழக்கத்தை விட அதிகளவு மக்கள் கூட்டம் காணப்பட்டது.