மக-ரிஷி வசிஷ்டர் ஞானம் அடைவதற்காக தல யாத்திரை புறப்பட்டார். அவ-ரது விருப்பத்தை அறிந்த பிரம்மா, சிவத்தலம் ஒன்றை குறிப்பிட்டு அங்கு சென்றால் ஞானம் கிடைக்கும் என்றார். வசிஷ்டரும் அங்கு சிவ பூஜை செய்து ஞானம் பெற்றார். இத்தலத்தின் மகிமையைக் கேள்விப்பட்ட இந்திரன் தான் செய்த ஒரு குற்றத்தைப் பொறுத்தருள சுவாமியிடம் வேண்டினான். சிவனும் அவனை ஏற்றுக் கொண்டார். இந்திரனின் குற்றத்தைப் பொறுத்துக் கொண்டதால் சுவாமிக்கு, ‘குற்றம் பொறுத்த நாதர்’ என பெயர் ஏற்பட்டது. அம்மன் கோல் வ-ளை-நா-ய-கி எனப்பட்டாள். மயி-லா-டு-து-றை-யில் இருந்து 14 கி.மீ., துாரத்தி-லுள்ள தலை-ஞா-யிறு என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தை ‘கருப்ப-றி-ய-லுார்’ என்பர். இங்கு தரிசித்தால் படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். கல்வி வளர்ச்சிக்காக பாடும் சம்பந்தர் தேவாரம் இங்கு வைத்து பாடப்பட்டதாகும்.