இயேசு குன்று ஒன்றில் அமர்ந்து மக்களைப் பார்த்தார். அவர்களில் பலரது முகங்களில் கவலை ரேகை படர்ந்திருந்தது. அநேகமாக எல்லாருமே ஏழைகளாக இருந்தனர். அவர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்தது. * மனம் வருந்தாதீர்கள், சொர்க்கம் என்பது ஏழைகளின் ராஜ்ஜியம் தான். * தங்களுக்கு ஆறுதல் வேண்டும் என கேட்பவர்கள், ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்படுகிறார்கள். * கருணையோடு இருப்பவர்களுக்கு கருணை கிடைக்கும். * துாய இருதயத்தோடு இருப்பவர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்படுகிறார்கள். * அமைதியை உருவாக்குகிறவர்கள் ஆண்டவரின் புதல்வர்கள் என அழைக்கப்படுவர். * ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அவர் என்றும் உங்களை ஆசிர்வதிப்பார். * உங்கள் உணவுக்காகவும், உடைக்காகவும் கவலைப்பட வேண்டாம். ஆண்டவர் அதற்கு பொறுப்பேற்பார். அவை கிடைக்க வேண்டுமென ஆண்டவரிடம் கேட்டால் போதும். * நீங்கள் பிரார்த்தனை செய்வதை மற்றவர்கள் பார்த்து உங்களைப் பெருமையாக பேச வேண்டும் என எண்ணாதீர்கள். தனியறைக்குள் பிரார்த்தியுங்கள். * உங்களைப் பற்றி அறிந்தவர் ஆண்டவர். நீங்கள் கேட்கும் முன்பே உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார்.