ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரவிழாவை பக்தர்களின்றி அரசு அறிவுறுத்தி உள்ள கட்டுபாடுகளுடன் நடத்த அறநிலையத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இதையடுத்து செயல் அலுவலர் இளங்கோவன் கூறியதாவது: நாளை (ஜூலை 16) காலை 10:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கோயில் வளாகத்தில் ஆண்டாள் ரெங்கமன்னார் வீதிஉலா, மண்டபம் எழுந்தருளல், பெரியாழ்வார் மங்களாசாசனம், ஐந்து கருடசேவை, சயன திருக்கோலம் நடக்க உள்ளது. 9ம் நாளான ஜூலை 24 காலை 8:05 மணிக்கு தேரோட்டத்திற்கு பதிலாக தங்கதேரில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருள கோயில் வளாகத்திலே தேரோட்டம் நடக்கும் . விழாவினை ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யபட்டுள்ளது,என்றார்.