பதிவு செய்த நாள்
01
ஆக
2020
10:08
மேட்டுப்பாளையம், ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
மேட்டுப்பாளையம் கெண்டையூர் சாலையில், தேவி ஸ்ரீ கருமாரியம்மன் உடனமர் அஷ்டதாரா லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அம்மனுக்கு, 10,000 வளையல்களில் சிறப்பு அலங்காரமும், அபிஷேக பூஜையும் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் கிருஷ்ணசாமி லே-அவுட்டில் உள்ள, விளையாட்டு மாரியம்மன் கோவிலில், வரலட்சுமி நோன்பு மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு ஆண்டாள் அலங்காரம் செய்யப்பட்டது. இரண்டு கோவில்களிலும், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, வளையல், மஞ்சள், குங்குமம், மாங்கல்ய தாலி சரடு ஆகியவை வழங்கப்பட்டன.