சோமனூர்: சோமனூர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் பூணல் பண்டிகை நடந்தது. சோமனூர், சுப்பராயன் புதூர், செகுடந்தாளி, வினோபா நகர் செம்மாண்டம்பாளையம், செங்கத்துறை, குமாரபாளையம் பகுதியில் உள்ள தேவாங்க சமுதாயத்தினர் பூணல் பண்டிகை கொண்டாடினர். சோமனூர் ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைக்குப்பின், மக்கள் பூணல் அணிந்து கொண்டனர்.