பதிவு செய்த நாள்
03
ஆக
2020
02:08
ஆர்.எஸ்.மங்கலம்:ஆடி 18யை முன்னிட்டு விவசாயிகள் நிலங்களில், நெல் விதைகளை இட்டு வழிபாடு செய்தனர்.
ஆடி 18 நிலத்தில் விதை நெல் இடுதல், வீட்டு சுப நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற நாளாகும்.ஆர்.எஸ்.மங்கலம், ஊரணங்குடி, செங்குடி, சேத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று விவசாயிகள் தங்களது நிலங்களில், விதை நெல்லை ஒரே இடத்தில் மொத்தமாக போட்டு விவசாயம் செழிப்படைய வேண்டி சூரிய பகவானை வழிபாடு செய்தனர்.
விவசாயி பன்னீர் செல்வம் கூறுகையில், விதைப்பு செய்ய வேண்டிய நெல் விதைகளின் முளைப்பு திறனை சோதனை செய்வதற்காக, ஒரே இடத்தில் மண்ணில் நெல் விதைகளை துாவி மண் போட்டு மூடி விடுவோம். இப்பகுதிகளில் ஆவணியில் விதைப்பு பணி துவங்கும் என்பதால், ஆடி பெருக்கில், விதை நெல் இட்டு முளைப்பு திறனை சோதனை செய்து குடும்பத்தினருடன் வழிபட்டோம், என்றார்.