Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி ... சபரிமலை சீசனில் ஒரு நாளைக்கு 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி சபரிமலை சீசனில் ஒரு நாளைக்கு 5000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியறே்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியறே்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

20 செப்
2020
12:09

திருப்பதி: திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்ஸவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி புறப்பாடு செய்தார்.திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தன்று தேவஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்ஸவத்தை நடத்தி வருகிறது. அதன்படி நேற்று முதல் வருடாந்திர பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.இதை முன்னிட்டு கோவில் வண்ண மலர்கள், மின் விளக்குகள், மாவிலை தோரணங்கள், வாழை மரங்களால் அலங்கரிக்கப்பட்டது.

பிரம்மோற்ஸவம் இந்தாண்டு கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறது. மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கொடிமரத்தின் அருகில் எழுந்தருளினர். மாலை 5:௦௦ மணிக்கு கொடிமரம் மற்றும் பலிபீடம் உள்ளிட்டவற்றுக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.பின் கொடிமரம் தர்பை புற்களால் நெய்யப்பட்டு மாவிலை கட்டப்பட்டு திருமண் அணிவிக்கப்பட்டது. இரவு 8:30 முதல் 9:30 மணிவரை பிரம்மோற்ஸவத்தின் முதல் வாகனமான பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி தன் உபய நாச்சியார்களுடன் கல்யாண உற்ஸவ மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் தேவஸ்தான அதிகாரிகள் குறிப்பிட்ட அளவில் பங்கேற்றனர்.

திருமலையில் பெருமாளை பார்க்க பிரம்மோற்சவ நாளில் எண்பது ஆயிரம் பேர்களில் இருந்து ஒரு லட்சம் பேர் வரை வருவர் ஆனால் இப்போது பதிமூன்றாயிரம் பேர்களுக்கு மட்டுமே முன்னுாறு ரூபாய் டிக்கெட் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது இலவச தரிசனம் கிடையாது ஆகவே ஆன்லைனில் டிக்கெட் எடுத்து வருபவர்கள் நெரிசல் இல்லாமல் பெருமாளை தரிசிக்கின்றனர். இந்த விவரம் எதுவும் தெரியாமல் மலைக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்திலேயே திருப்பி அனுப்பப்படுகின்றனர். பிரம்மோற்சவ விழா நாளில் விதவிதமான வாகனங்களில் வரும் மலையப்பசுவாமியை கோவிலின் அதிகாரபூர்வமான எஸ்விபிசி சேனலில் மட்டுமே நேரலையில் காணலாம். -எல்.முருகராஜ்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar