காரைக்கால்; கோட்டுச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கோட்டுச்சேரி பகுதியில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாகசாலை பூஜை கடந்த 26ம் தேதி இரவு துவங்கியது. நேற்று 6ம் கால யாகசாலை பூஜை முடிந்து, கும்பாபிஷேகம் நடந்தது.மூலவர் சீதளாதேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை நடைபெற்றது. விழாவில் வேளாண் துறை அமைச்சர் கமலகண்ணன், எம்.எல்.ஏ., சந்திரபிரியங்கா, அறங்காவலர் குழுவினர் மற்றும் திருப்பணிக்குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.