பதிவு செய்த நாள்
25
நவ
2020
10:11
சென்னை : திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலில், கார்த்திகை தீப உற்சவத்தை முன்னிட்டு, ஆதீபுரீஸ்வரருக்கு தைலாபிஷேகம் நடக்கிறது.
திருவொற்றியூரில் அமைந்துள்ளது வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி கோவில். மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில், மூலவராக ஆதிபுரீஸ்வரர் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில், ஆண்டுதோறும் மூலவர் கவசம் திறந்து, தைலாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஆதிபுரீஸ்வரர் கவசம் திறந்து, புனுகு சாம்பிராணி, தைலாபிஷேகம், மகா அபிஷேகம், 29ம் தேதி மாலை, 6:00 மணியில் இருந்து, 7:00 மணிக்குள் நடக்கிறது. தொடர்ந்து, நவ., 30, டிச., 1 ஆகிய இரு நாட்களிலும் காலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணிவரை கவசமின்றி சுவாமி தரிசனம் செய்யலாம்.
இதையடுத்து, டிச., 1ம் தேதி இரவு, 8:00 மணிக்கு நடக்கும் அர்த்தஜாம பூஜைக்கு பின், மீண்டும் கவசம் அணிவிக்கப்படுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் சித்ராதேவி செய்து வருகிறார். கொரோனா காலம் என்பதால், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பாதுகாப்பு, முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.கட்டுப்பாடுகள்l விழாவிற்கு வரும் வெளியூர் பக்தர்கள், 72 மணி நேரத்திற்கு முன், கொரோனா பரிசோதனை எடுத்து, அதன் அறிக்கையுடன் வரவேண்டும்l பக்தர்கள் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.
முக கவசம் கட்டாயம்l: கர்ப்பிணி பெண்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோயாளிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வருகை புரிவதை தவிர்க்க வேண்டும்l நோய் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்l சமூக இடைவெளியுடன் வரிசை, உள் நுழைவு, வெளியேற தனித்தனி வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுl அர்ச்சனை, அமர்வு தரிசனம் கிடையாது. பிரசாதங்கள் டப்பாக்களில் வினியோகம் செய்யப்படும்l பக்தர்கள் வசதிக்காக, ஆன்-லைன் விரைவு தரிசன கட்டண சீட்டு, www.tnhrce.gov.in என்ற இணைய தள முகவரியில் முன்பதிவு செய்யலாம். நேரடியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.