நாம் செய்யக் கூடிய தானத்திற்கு தகுந்தாற்போல் நமக்கு பலன்கள் கிடைக்கின்றன. சில தானங்கள் மறுபிறவியிலும் நன்மை தருகின்றன. அப்படிப்பட்ட தானங்கள் இங்கே:
தங்கதானம் - குறைவில்லாத ஐஸ்வரியம் உண்டாக்கும். வெள்ளி தானம் - அழகான சரீரம் கிடைக்கும். அரிசி போன்ற தானியங்கள் - குறைவில்லாத உணவு கிட்டும். பசித்தவர்களுக்கு உணவு கொடுத்தல் - குறைவில்லாத சுகம் உண்டாகும். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்தல் - அழகான அன்பான பதிவிரதையான மனைவி கிடைப்பாள். ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல் - நல்ல குழந்தைகள் பெறலாம். பிராணிகளின் தாகத்திற்கு நீர், ஆகாரம்அளித்தல் - நோயற்ற வாழ்வு தரும்.