பதிவு செய்த நாள்
27
நவ
2020
05:11
ஊட்டி: கார்த்திகை தீபத் திருநாளை கொண்டாடும் வகையில், நகரின் பல பகுதிகளில் பல வடிவங்களில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கார்த்திகை தீபத் திருநாள், நாளை 29ல் கொண்டாடப்படப்படுகிறது. இந்நாளில், வீடு, கடை, அலுவலகம், கோவில்களில், அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவர். ஊட்டியில், மார்க்கெட், மெயின்பஜார், ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பிரதான இடங்களில், அகல் விளக்குகள் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். சுட்டி விளக்கு முதல், ஐந்து முக விளக்கு, கடவுளர்களுடன் கூடிய விளக்கு, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சரவிளக்கு என, பல வடிவங்களில் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறிய விளக்குகள் முதல் பெரிய அளவிலான விளக்குகள், 10 ரூபாய் முதல், அதல் விளக்குக்கு ஏற்றது போல் விற்பனை செய்யப்படுகின்றன. அதனை, ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.