பதிவு செய்த நாள்
27
நவ
2020
05:11
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், சிறப்பு அலங்காரத்தில் உள்பிரஹாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப விழாவின் எட்டாம் நாளான இன்று காலை உற்சவத்தில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் ஆயிரம்கால் மண்டபம் அருகே பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கார்த்திகை தீப விழாவில் 2668, அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது ஏற்றப்படும், மஹா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாதுணியை கொண்டு வந்து, கோவில் உள்பிரஹாரத்தை சுற்றி வந்த பக்தர்கள் வழிபாடு செய்தனர். கார்த்திகை தீப விழாவின் தெப்பல் உற்சவத்திற்காக முதல் முறையாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்த குளத்தில் நடைபெறவுள்ளதால், தெப்பல் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.