பதிவு செய்த நாள்
03
டிச
2020
03:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மூலவர் அருணாசலேஸ்வரரை, மொபைல்போனில் எடுத்த படம், வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது. இதற்கு, கடவுளை காட்சி பொருளாக்கி விட்டார்களே என, பக்தர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 29ல், மகா தீப திருவிழா அன்று கோவிலினுள் சாதாரண பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், கோவில் பணியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மேலும், மூலவர் அருணாசலேஸ்வரரை தரிசிக்க, முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கருவறையில் உள்ள, அருணாசலேஸ்வரரை, மொபைல்போன் மூலம் எடுத்த படம், வாட்ஸ் ஆப்பில், தற்போது வைரலாகி வருகிறது. இதை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும், பக்தர்கள் தங்களது கருத்துக்களை, வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டு வருகின்றனர். இதில், கடவுளை காட்சி பொருளாக்கி விட்டனர் என்ற தலைப்பில், தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.